அரச சார்பற்ற அமைப்புக்கள் தொடர்பான தேசிய செயலகத்தினால் இலங்கையில் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு வசதி வாய்ப்புக்களை வழங்குவதற்காக தம் வேலைத்திட்டத்தினை மாற்றியமைத்துள்ளனர். அதன் கீழ் அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான தேசிய செயலகம்,

மேற்பார்வை பிரிவின் செயற்பாட்டை இலகுபடுத்தும் நோக்கில் தம் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினை மறுசீரமைத்து நிகழ்நிலை தரவுகள் முன்வைக்கும் முறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தங்களது நிறுவனத்தின் கீழ் உள்ள தகவல்களை அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான தேசிய செயலகத்திற்கு 2024 ஜனவரி மாதம் 31 ம் திகதிக்கு முன்னர் கீழ் உள்ள கூகுள் படிவத்தில் (Google Link) ஊடாக அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கவும்.