பதிவு செய்யும் முறைமையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்தல்
இதற்காக அரச சார்பற்ற நிறுவனங்களை பதிவு செய்யும் முறைமையொன்றை நாட்டினுள்
அறிமுகப்படுத்த கூடிய அவதானத்தை செலுத்த அரசாங்கத்திற்கு அவசியம் ஏற்பட்டுள்ளது.
அதற்கிணங்க குறித்த நிறுவனங்களின் செயற்பாடுகளினை ஆராய்ந்து அதன் உரிய செயற்பாட்டு
தன்மை தொடர்பில் பரிந்துரைகளை முன்வைப்பதற்கு ஜனாதிபதியினால் ஆணைக்குழுவொன்று
ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்த ஆணைக்குழுவினால் செய்யப்பட்ட பரிந்துரைகளுக்கு ஏற்ப 50,000
ரூபா அல்லது அதற்கு மேற்பட்ட நிதியத்தினை கொண்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் பதிவு
செய்தலை கட்டாயப்படுத்தி பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
ஏற்படுத்தப்பட்டுள்ளது. எப்படியாயினும் அவசர கால சட்ட ஒழுங்கேற்பாடுகள் நீக்கப்பட்டதனால்
இம்முறைமை நீக்கப்பட்டது. 1995 ஆம் ஆண்டில் சுகாதார, நெடுஞ்சாலைகள் மற்றும் சமூக
சேவைகள் அமைச்சினால் 1980 ம் ஆண்டு சட்டத்திற்கு திருத்தங்கள் சில முன்மொழியப்பட்டது.
அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகளை முகாமை செய்ய அரச சார்பற்ற அமைப்புக்களின்
ஆலோசனை சபையொன்றை ஏற்படுத்தல் மற்றும் இடைக்கால முகாமைத்துவ சபையொன்றை
நியமித்தலுக்கு தேவையான சட்ட மூலம் தயாரிக்கப்பட்டது. இந்ந ஏற்பாடுகளுக்கு எதிராக பாரிய
எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் 1998 ஆம் ஆண்டில் குறித்த சட்ட மூலம்
பாராளுமன்றத்தினால் அங்கீககரிக்கப்பட்டது. (1998 ஆம் ஆண்டின் 8 ம் இலக்க சட்டம்)
அதற்கிணங்க 1996 ஆம் ஆண்டில் சுகாதாரம், நெடுஞ்சாலைகள் மற்றும் சமூக சேவைகள்
அமைச்சின் கீழ் அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான தேசிய செயலகம் ஏற்படுத்தப்பட்டது.
அதன் பின்னர் காலத்திற்கு காலம் பாதுகாப்பு, வெளிநாட்டலுவல்கள் உள்ளிட்ட வெவ்வேறு
அமைச்சின் கீழ் செயற்பட்டுள்ளதுடன் தற்போது அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய
செயலகம் 2022 ஜுலை மாதம் தொடக்கம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் விடய தானத்தின்
கீழ் செயற்படுத்தப்பட்டு வருகின்றது.
இவ்வலுவலகம் தமது சேவையை நாடு முழுவதும் செயற்படுத்துவதுடன் அதற்காக அரச சார்பற்ற
நிறுவனங்கள் மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரிகள் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஏற்புடையதாக
நியமிக்கப்பட்டும் உள்ளனர். பதிவாளரின் அதிகாரங்களின் ஒரு பகுதி மாவட்ட
செயலாளர்களுக்கும் பிரதேச செயலாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க மாவட்ட
செயலாளர் பிரதி பதிவாளராகவும் பிரதேச செயலாளர் உதவி பதிவாளராகவும்
கடமையாற்றுவதற்கான உத்தியோகபூர்வ அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.